பிரதிபலிப்பு

கடைத்தெருவில்
பொம்மையை நோக்கி நீளும்
குழந்தையின் கைவிரல்.

பாக்கெட்டில் பார்வை செலுத்தி
குழந்தையை அள்ளியணைத்து
நகரும் தந்தை.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் - தனக்குத்தானே சொல்லிக்கொண்டது
புத்தர்சிலை.

No comments:

Post a Comment