எது பிரிவு?!

பதினெட்டு வருசம் பழகிய
சொந்த ஊரப்பிரிஞ்சப்ப
கொஞ்சம்கூட வருந்தல.

வெளிமாநிலத்துக்கு வேலைக்குப்போன
அப்பன பார்க்க... வருசக்கணக்காகும்ன்னு
சொன்னப்ப கூட ஏதும் தோனல.

அக்காவுக்கு கல்யாணம்.
சைக்கிள்ள ரெண்டழுத்து அழுத்துனா
மாமா ஊர்க்கு போயிடலாம்.
பெருசா பிரிஞ்ச சோகம் தெரியல.

படிச்சுமுடிச்சு வேலைக்காக
சென்னை கிளம்பும்போதும்
ரெண்டுமாசத்துக்கு ஒருதடவ
ஊருக்கு வந்துபோகலாம்.
அம்மா கண்ணீரைத் தொடச்சு
சமாதானம் பண்ணியாச்சு.

இப்படி பக்குவப்பட்ட
பாழாப்போன மனசு...
ரூமுக்கு போய்ச்சேர இன்னும்
அரைமணி நேரம்தாம் எனும்போது
மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலோ... ஏன்
பேட்டரி லோ ஆனாக்கூட
வாழ்க்கையே இழந்தாப்போல
சோகம் தொண்டையை அடைச்சு
வருந்துதே என்ன சொல்ல!


No comments:

Post a Comment